ஒன்றாக வேலை செய்வோம் புதுமையான யோசனைகளை தெரிவியுங்கள் என கொடைக்கானல் வருவாய் கோட்ட “உதவி ஆட்சியர்”
சிவகுருபிரபாகரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்ட
தினத்திலிருந்து அசத்துகிறார். மகிழ்ச்சியில் கொடைக்கானல் மக்கள்
————————–
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்
கால் நூற்றாண்டுக்கு பிறகு கொடைக்கானல் வருவாய் கோட்டத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி நியமனம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன் அவர்களை நியமிக்கப்பட்டுள்ளார்
திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் பயிற்சியில் இருந்தவர்
எம்.
சிவகுருபிரபாகன்
இவருக்கு தற்போது பணியிடம் வழங்கப்பட்டுள்ளது கடந்த பல ஆண்டுகளாக கொடைக்கானல் வருவாய் கோட்டத்திற்கு பதவி உயர்வு பெற்று வருபவர்கள் கோட்டாட்சியர்களாகவே
நியமிக்கப்பட்டு வந்தனர் இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு குர்னிகால்சிங் என்ற ஐஏஎஸ் அதிகாரி கொடைக்கானல் உதவி ஆட்சியாளராக பணிபுரிந்தார் அவருக்குப் பிறகு தற்போது
நேரடி ஐஏஎஸ் அதிகாரியாக
சிவகுருபிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்த இளம் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆர்வம் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பில் கொடைக்கானல் மக்கள் உள்ளனர் உதவி ஆட்சியர் சிவகுருபிரபாகரன் தனது ட்விட்டர் பதிவில்
கொடைக்கானலில் ஒன்றாக வேலை செய்வோம் புதுமையான யோசனைகளை அனுப்புங்கள் என தெரிவித்துள்ளார்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மேல்வட்டங்காடு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்
சிவகுருபிரபாகரன் இவரது திருமணம் ஏற்பாட்டின் போது தனது மனைவி ஒரு மருத்துவராக தான் இருக்க வேண்டும் அதுவும் எனது கிராமத்தில் அவர் மருத்துவர் சேவை செய்ய வேண்டும் இதுதான் நான் கேட்கும் வரதட்சனை கூறியுள்ளார் இதற்கு ஒப்புக்கொண்ட சென்னையைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ண பாரதியை திருமணம் செய்துள்ளார்
சிவகுருபிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது
செய்தியாளர்
கோடை
ஐ எஸ் மோகன்

