
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உயர்நிலைப் பள்ளிகள் மேலாளராக டி.எஸ்.எப்.பிரேம்குமார் ராஜாசிங்-ஐ பிஷப் தேவசகாயம் நியமித்தார்
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி துவங்கி அக்டோபர் 20ம் தேதி வரை 3 கட்ட தேர்தலாக நடைபெற்றது. இதில் டி.எஸ்.எப். கிப்ட்சன் தலைமையிலான அணி அமோக வெற்றி பெற்றது. டி.எஸ்.எப்.கிப்ட்சன் லே செயலாளராக வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்கு புதிய நிர்வாகிகள் அனைவரும் பதவியேற்று தங்கள் பணிகளை பேராயர் தலைமையில் துவக்கியுள்ள நிலையில் இன்று (02.11.2021) பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகள் பலரை நியமனம் செய்தார். அதன்படி, திருமண்டலம் முழுவதும் உள்ள உயர்நிலைப்பள்ளிகள் அனைத்திற்கும் மேலாளராக டி.எஸ்.எப் பிரேம்குமார் ராஜாசிங்-ஐ நியமித்து பேராயர் ஆசி வழங்கினார். பின்னர் முன்னாள் லே செயலாளர்

டி.எஸ்.எப்.துரைராஜ், டி.எஸ்.எப்.பால்பாண்டியன் ஆகியோரிடமும் ஆசி பெற்றார்.
புதிதாக மேலாளராக நியமிக்கப்பட்ட டி.எஸ்.எப் பிரேம்குமார் ராஜாசிங்-கிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். லே செயலாளர் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உபதலைவர் அருட்திரு. தமிழ்ச்செல்வன், குருத்துவச் செயலர் அருட்திரு.இமானுவேல் வான்ஸ்றக், செயற்குழு உறுப்பினர் வட்டக்கோவில் ஜான்சன், பரிசுத்த பேட்ரிக் நலன் விரும்பும் ஐக்கிய அணி தலைவர் எம்.டி.இன்ஸ்டீன் மற்றும் திருமண்டலத்தைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

S. பிரேம்குமார் ராஜாசிங்
(உயர்நிலைப் பள்ளிகள் மேலாளர் )
மேலும், இன்று திருமண்டல தொடக்கப்பள்ளிகளின் மேலாளராக அருட்திரு ஜேஸ்பர் பேராயரால் நியமிக்கப்பட்டார். பிஷப் கால்டுவெல் சபை மன்றத்திற்கு அருட்திரு.ஜேஸ்பர், தாவீது சுந்தரானந்தர் சபை மன்றத்திற்கு அருட்திரு.நவராஜ், போப் சபை மன்றத்திற்கு அருட்திரு.ஸ்டீபன் நீல், கனான் ஆர்தர் மர்காசியஸ் சபை மன்றத்திற்கு அருட்திரு.அல்பர்ட் தாமஸ், ராக்லன்ட் சபை மன்றத்திற்கு அருட்திரு.சாமுவேல் தாமஸ், ஜான்தாமஸ் சபை மன்றத்திற்கு அருட்திரு. கோல்டுவின் ஆகியோர்களை பேராயர் தேவசகாயம் நியமித்தார்.
இதுகுறித்து திருமண்டல மக்கள் மத்தியில் கருத்து கேட்டபோது, பிஷப் தேவசகாயம், லே செயலாளர் கிப்ட்சன் ஆகியோர் இணைந்து திருமண்டல வளர்ச்சிக்காக செயல்படுவது மிகுந்த மனமகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
செய்தி தொகுப்பு: ஆத்திமுத்து.

