சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது – ரூபாய் 15,000/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.
♻️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குருசாமி தலைமையிலான போலீசார் நேற்று (09.10.2021) வேம்பார் சோதனைச்சாவடி வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.
♻️ இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கலா வழக்குப்பதிவு செய்து அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கருப்பசாமி (31) என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து ரூபாய் 15,000/- மதிப்பிலான புகையிலை பொருட்களும், இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

