தமிழகம் முழுவதும் இன்று 5 வது மெகா தடுப்பூசி முகாம்:
நடைபெற்று வருகிறது குறிப்பாக இன்று 30 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது!
இதுவரை இல்லாத வகையில், அதிகம் பேர் பயன் பெறும் முகாமாக, இன்றைய முகாம் இருக்கும்.மக்கள் வீட்டின் அருகில் நடக்கும் முகாம்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற 4 மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதை தொடர்ந்து இன்று 5வது மெகா கொரோனா தடுப்பூ முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் என மொத்தம் 30 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 20 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். அதன்படி, இன்றைய தினம் 2வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இல்லாத வகையில், அதிகம் பேர் பயன் பெறும் முகாமாக, இன்றைய முகாம் இருக்கும்.மக்கள் வீட்டின் அருகில் நடக்கும் முகாம்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று இரவு 7 மணிவரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் திமுக நகர செயலாளர் இப்ராஹிம் மற்றும் கொடைக்கானல் நகராட்சி நகர்நல அலுவலர் பொறுப்பு சுப்பையா ஆகியோர் கொடைக்கானலில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதை அமுல் படுத்தும் வகையில் அரசின் அறிவுரைகளை விழிப்புணர்வு மூலம் கொடைக்கானல் மக்களுக்கு நேரடியாக தொடர்ந்து கொண்டு செல்கின்றனர் இதனால் இந்த சிறப்பு முகாம் நடைபெறுவதற்கு முன்பே கொடைக்கானல் பகுதியில் பெருமளவு பொதுமக்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் வகையில் நகர்நல அலுவலர் மற்றும் திமுக நகர செயலாளர் ஆகியோர் பெருமுயற்சியால் பொதுமக்கள் இந்த மெகா தடுப்பூசி முகாமில் திரளாக வந்து தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் பல்வேறு விழிப்புணர்வையும் தடுப்பூசி போட வரும் அவர்களுக்கு குடிநீர் மற்றும் போதிய அடிப்படை வசதிகளை முன்கூட்டியே செய்து கொடுத்து வரும் இவர்களின் சிறந்த பணியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள் கொடைக்கானலில் தடுப்பூசி 100% செலுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு நடைபெறுவது பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது

