• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம்

policeseithitv by policeseithitv
June 5, 2021
in Uncategorized
0
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் வேறு வழக்கில் கைதாகி மரணமடைந்தவரின் தாய்க்கு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு, மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மனஉளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர, ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச் சாலையிலேயே இறந்துவிட்டபடியால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரண உதவியை திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கினார். இந்நிகழ்வில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Previous Post

சென்னையில் கொரனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் காவலர்‌‌‌களின்‌‌‌ குடும்‌‌‌பத்‌‌‌தினரை சென்னை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ நேரில்‌‌‌ நலம் விசாரித்‌‌‌தார்‌‌‌

Next Post

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பங்களிப்புடன் அடர்காடுகள் அமைக்கும் பணியை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.

Next Post
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பங்களிப்புடன் அடர்காடுகள் அமைக்கும் பணியை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பங்களிப்புடன் அடர்காடுகள் அமைக்கும் பணியை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In