தூத்துக்குடி மாநகராட்சி கணக்கு குழு தலைவரும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச்செயலாளருமான ரெங்கசாமிதலைமையில் ஹவுசிங்போர்டு பகுதியில் நடைபெற்ற விழாவில் மேயர் ஜெகன் பொியசாமி கலந்து கொண்டு 3வது வார்டுக்குட்பட்ட தூய்மை பணியாளா்கள் அலுவலர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் இனிப்புகள் வழங்கி பேசுகையில் மாநகராட்சி பகுதியில் எல்லோரும் சுகாதாரமான முறையில் வாழ வேண்டும். என்பதற்காக பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் பங்கு போற்றதக்கது. காரணம் கடந்த மழைவௌ்ள காலத்தின் போது தேவையற்ற கழிவு பொருட்களை அகற்றியது மட்டுமின்றி பல உயிாிழப்பு ஏற்பட்டபோது அந்த இடத்திலும் நின்று பல்வேறு பணிகளை இந்த மாநகராட்சி பகுதி மக்கள் நலன் கருதி பணியாற்றியதை எண்ணி மகிழ்கிறேன் இனி வரும் காலங்களில் தன்னலம் கருதாமல் பொது நலத்தோடு பணியாற்றும் உங்கள் வாழ்வு எல்லா வகையிலும் சிறக்க மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
விழாவில் வட்ட செயலாளா் தெய்வேந்திரன், இளைஞரணி வேல்முருகன், டிடிசி முத்துராஜ், கேடிசிபால்ராஜ், செல்வராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் தெற்கு மண்டல துைண ஆணையர் ராஜாமணி, மற்றும் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.

