• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் ஐப்பசி திருகல்யாண திருத்தேரோட்டம் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

policeseithitv by policeseithitv
October 18, 2024
in 24/7 ‎செய்திகள், Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் ஐப்பசி திருகல்யாண திருத்தேரோட்டம் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் ஐப்பசி திருகல்யாண திருத்தேரோட்டம் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டா் இளம்பகவத், எஸ்.பி அல்பட்ஜான் பங்கேற்பு

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது சித்திரை திருவிழா தேரோட்ட வைபவம் மற்றும் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட வைபவமாகும்.

ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட வைபவம் வருகிற அக்டோபர் 19ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி ஒவ்வொரு நாளும் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சிறப்பு தீப ஆராதனைகளுக்கு பின்பு ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் வருகிற அக்டோபர் 27ம் தேதி பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளது. சங்கரராமேஸ்வரர் மற்றும் பாகம்பிரியாள் திருக்கல்யாண வைபவம் வருகிற அக்டோபர் 29ம் தேதி நடைபெறுகிறது. தேரோட்ட திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சிவன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி முன்னிலை வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, சிவன் கோவில் அறங்காவல குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சாந்தி, கணக்கர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருத்தேரோட்ட வைபவத்தில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டா் இளம்பகவத், எஸ்.பி அல்பட்ஜான், ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தெரிவித்தார்.

Previous Post

தூத்துக்குடி பாரதி நகர் பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

Next Post

தூத்துக்குடி – கோரம்பள்ளம் 5வது வடிகால் மற்றும் மீன்வளக் கல்லூரி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Next Post
தூத்துக்குடி – கோரம்பள்ளம் 5வது வடிகால் மற்றும் மீன்வளக் கல்லூரி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி - கோரம்பள்ளம் 5வது வடிகால் மற்றும் மீன்வளக் கல்லூரி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In