தூத்துக்குடி,
தூத்துக்குடியை சார்ந்த அதிமுக நிர்வாகிகளான சுதாகர், ஜவஹர், ஜனார்த்தனன் ஆகியோரின் தந்தை மறைவிற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான ஆர்.சுதாகர், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும், மீளவிட்டான் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஆர்.ஜவஹர், தூத்துக்குடி மேற்கு பகுதி 1வது வட்ட கழகச் செயலாளர் ஆர்.ஜனார்த்தனன் ஆகியோரின் தந்தையும், மீளவிட்டான் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான த.ராஜபாண்டி நாடார் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர்களான சுகாதர், ஜவஹர், ஜனார்த்தனன் ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் திரு.ராஜபாண்டி அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன், இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.



