இன்று விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டு உருவாக்கப்பட்டிருந்தது.

விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” அவர்களை பொங்கல் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்தார்கள் அதன்விளைவாக இன்று புதூர் காவல்நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட சென்னம்பட்டி கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” பங்கேற்று சிறப்பாக விளையாடி இரண்டாம் பரிசுத்தொகை ரூ.15,001 (ரூபாய் பதினைந்தாயிரத்தி ஒன்று) மற்றும் கோப்பை வென்றுள்ளார்கள்.
விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்களை வெகுவாக பாராட்டினார்கள் .

