பசுவந்தனை அருகே கொசுவை விரட்ட தீமூட்டியபோது ஆடையில் தீப்பற்றி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள தெற்கு ஆவரைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சங்கர் (29). இவர் கடந்த 19ம் தேதி கொசுவை விரட்டுவதற்காக தனது வீட்டு முன்பு மரக் குச்சிகளை போட்டு தீ வைத்து எரித்துள்ளார்.
அப்போது அந்த சங்கர் கட்டியிருந்த ஆடை(கைலி)யில் தீப்பற்றியது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரகலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

