தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பூங்கா, அறிவியல் பூங்கா, கோளரங்கம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.1.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.662.22 கோடி மதிப்பீட்டில் 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.8.93 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதில், தூத்துக்குடி மாநகராட்சி – சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வ.உ.சி கல்லூரி அருகில் ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பூங்கா, அறிவியல் பூங்கா, கோளரங்கம் மற்றும் மானுடவியல் பூங்கா தூத்துக்குடி மாநகராட்சி – தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சி.வ.குளம் முள்ளிக்குளம் மீளவிட்டான் குளம் உட்பட மொத்தம் ரூ.662.22 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

