மதுரை மாவட்டத்தில் கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் சமூகவிரோதச் செயல்கள், கொலை, மணல் கடத்தல், போதைப்பொருட்கள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் படி காவலில் அடைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையத்தில் தாக்கலான கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அந்த நான்கு எதிரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமயநல்லூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பால சுந்தரம் மற்றும் சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளர் சிவபாலன் ஆகியோர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பூவேந்திரன் வயது 23, த/பெ மாரியப்பன், மேல நாச்சிகுளம் 2. ஜெயசூர்யா 22 த/பெ. ஆண்டிச்சாமி, கரட்டுப்பட்டி 3.சுபாஷ் 21, த/பெ ஆண்டிச்சாமி, கரட்டுப்பட்டி 4.சிவா 21, த/பெ முருகன் கரட்டுப்பட்டி ஆகிய நான்கு பேர்களின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் பரிந்துரையின்பேரில் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார்.
அதன்படி மதுரை மத்திய சிறைச்சாலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த மேற்படி 4 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணை வழங்கி மேற்படி நான்கு எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மதுரை மாவட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சு.இரத்தினவேல்.
செய்தியாளர்.
மதுரை.

