விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கோவிட்-19 மூன்றாம் அலை பரவுவதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
???? கொரோனா 3-வது அலை பரவுவதை தடுக்கும் விதமாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 05.00 மணி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் சித்த மருத்துவத்தினர் மற்றும் காவல்துறையினர் சார்பில் வியாபாரி சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகள், பொதுமக்கள் ஆகியோர்க்கு நிலவேம்பு குடிநீர், முகக்கவசம், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சமூகஇடைவெளி கடைபிடிப்பது போன்ற அறிவுரைகளுடன் பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
???? இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் Dr.தமிழ் அமுதன் அவர்கள், விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் திரு.இளவரசு, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் திரு.காசிலிங்கம், திருமதி.பஞ்சவர்ணம், காவல் ஆளினர்கள் , வியாபாரிகள் சங்கத்தினர், ஓட்டுனர் சங்கத்தினர்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


