நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்
நாகர்கோவில்,
நாகர்கோவில் நாகராஜா கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்று இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள் நாகராஜா திருக்கோயில் கொண்டு இங்கு தை பெருந்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் கடந்த 10 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது பல்வேறு இன்னிசைக் கச்சேரிகள், பரத நாட்டிய நிகழ்ச்சிகள் ஆன்மீக சொற்பொழிவு பக்தி இன்னிசை சுவாமி புஷ்ப வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார் உடன் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், வழக்கறிஞர் மகேஷ் ,இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் அரசு வழக்கறிஞர் வழக்கறிஞர் அரசு வழக்கறிஞர் மதியழகன், சதாசிவம் முனைவர் பசிலியன், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு மாபெரும் இன்னிசை கச்சேரியும் 9.30 மபத்தாம் சப்தவர்ணா நிகழ்ச்சி நடைபெற்றது பத்தாம் திருவிழா அன்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை சொற்பொழிவு மாபெரும் மியூசிக்கல் கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கேட்டுக் கொண்டனர்.

