நாகை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் புதுப்பள்ளியில் இருந்து கடத்த முயன்ற சுமார் ரூ. 17 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – 9 பேர் கைது
வேதாரண்யம் ஜன 18
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லூர் பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் வந்த இரண்டு வாகனங்களை சோதனை செய்ததில் அந்த கார்களில் கடத்தப்பட்ட 167 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் ரூ. 17 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. மேலும் அதில் வந்த வேட்டைக்காரனிருப்பு பகுதியைச் சேர்ந்த குஞ்சுபிள்ளை மகன் சுதாகா் (40), அன்பரசன் மகன் பிரபாகரன் (27), முருகையன் மகன் சுதன்ராஜ் (27), கேரளா மாநிலம், திருவனந்தபுரம், பூவச்சள், புன்னமோடு, மணியன் மகன் உத்தப்பன் (47), சேய்குளம் வீரன்காவு பகுதி பிரைட்வில்லியம் ஆங்குரேவ் மகன் ஷினுன்ரைட் (35), அசோக் மகன் அக்ஷய் (24), சசி மகன் அனீஸ்குமார் (38), ஆந்திரபிரதேஷ் மாநிலம் விசாகப்பட்டினம் பஞ்சாங்கம் மகன் நாகராஜ் (22), சேட்டமகரா கோவிந்தராவ் மகன் அனில் (25) ஆகிய 9 நபா்களை கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

