வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி.
வேதாரண்யம் ஜன 18
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர சுவாமி ஆலயம் வரலாற்று சிறப்பு மிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். திருமண கோலத்தில் சிவன் பார்வதி அகத்தியருக்கு காட்சி கொடுத்த இடம்.
ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமத்தில் வேதாரண்யம் கோவிலுக்கு சொந்தமான சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் குத்தகைக்கு சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைந்த நெல்லை அறுவடை செய்து தைப்பூசம் அன்று அங்கிருந்து நெல் கோட்டையாக கட்டி சுவாமிக்கு அளிக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டும் இதே போல் நெல் அறுவடை செய்து அதனை கோட்டையாக கட்டி விவசாயிகள் வேதாரண்யம் கொண்டுவந்து வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சியம் விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று வேதாரண்யம் கோவிலில் ஒப்படைத்தனர்.
பின்பு அங்கு நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

