கோடிக்கரையில் மாட்டுப் பொங்கலையொட்டி மீன் விலை ஏற்றம்.
வேதாரணியம்
ஜன 15
இன்று மாட்டுப் பொங்கலையொட்டி வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அசைவப் பிரியர்கள் மீன்களை வாங்க நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஏராளமானோர் திரண்டனர். கோடிக்கரையில் மீன்பிடி சீசன் நடைபெறுவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். நேற்று பொங்கல் விழாவையொட்டி சொந்த ஊருக்கு மீனவர்கள் திரும்பியதை அடுத்து கோடிக்கரையில் சில படகுகள் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. கடலுக்குச் சென்ற சில மீன்பிடி படகுகளில் குறைவான மீன்களே வலையில் சிக்கியதால் மீன் விலை உச்சத்தை தொட்டது. வாலை மீன் கிலோ 300 ரூபாய் க்கும் 3 புள்ளி நண்டு கிலோ 700 ரூபாய்க்கும் என விற்பனையானது . வேதாரண்யம் பகுதிகளில் உள்ள கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர் ,குரவப்புலம், கரியாப்பட்டினம், நெய்விளக்கு/ செம்போடை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வாகனங்களில் மீன்களை வாங்க ஏராளமானோர் வந்ததையடுத்து கடற்கரை கூட்டமாக காணப்பட்டது.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

