மதுரையில் கொரோனா பரவல் அதிகமாகிவரும் சூழலில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை தெற்கு மாசி வீதியும் மேலமாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூரண கிருஷ்ணன் தலைமையில் போக்குவரத்து போலீசார் முககவசம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அவ்வழியே முககவசம் அணியாமல் வரும் பொது மக்களுக்கு முககவசம் வழங்கி அதன் முக்கியத்துவத்தை விளக்கி கூறி அறிவுறுத்தி வருகின்றனர்
போக்குவரத்து போலீசாரின் இப்பணியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

