திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், காவலர்களின் நலன் கருதியும் தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி முதல் தவணை தடுப்பூசியை 97% காவல் ஆளிநர்களும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 95% காவல் ஆளிநர்களும் செலுத்திக்கொண்டுள்ளனர். மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
அதன்பேரில் உலகலாவிய பெருந்தொற்றான கோவிட்-19 மற்றும் ஓமைக்ரானை கட்டுப்படுத்தும் நோக்கில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதல்களை திருச்சி மாநகரில் முழுமையாக அமல்படுத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., உத்தரவிட்டத்தின்பேரில், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய காவலர்களுக்கும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த காவலர்களுக்கும் மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான முகாமை இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துவங்கி வைத்தார். மேலும் இது போன்ற பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு அனைத்து காவலர்களுக்கும் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்

