தற்காலிக கொரோனா நோய் பராமரிப்பு மையத்தை நாகை ஆட்சியர் ஆய்வு செய்தார் .
வேதாரணியம்
ஜன 11
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவன கட்டிடத்தில் தற்காலிக கொரோனா நோய் பராமரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர். அருண் தம்புராஜ் படுக்கை மற்றும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை பார்வையிட்டார். மேலும் நோயாளிகளுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் மற்றும் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சி வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆய்வின் போது நாகை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் லியாக்கத் அலி, மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் திமுக தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகா குமார் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கே . வேதரத்தினம், திமுக வேதாரண்யம் நகர கழக செயலாளர் மா.மீ. புகழேந்தி பொதுக்குழு உறுப்பினர் மறைமலை, உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

