வேதாரண்யத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்களை தி.மு.க நகரச்செயலாளர் மா.மீ.புகழேந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.
வேதாரணியம் ஜன 10
பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசால் பச்சரிசி ,வெல்லம், முந்திரி ,திராட்சை, ஏலக்காய் , பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகை கால சமையலுக்காக மிளகாய்தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம் , மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை , கோதுமை மாவு, உப்பு ஆகியவை துணிப்பையில் , முழு கரும்பும் என 21 பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் அடங்கிய பையை பயனாளிகளுக்கு வேதாரண்யம் தி.மு.க நகரச் செயலாளர் மா.மீ.புகழேந்தி வழங்கி தொடங்கி வைத்தார். வேதாரண்யம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில்
வேதாரண்யம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சரவணன், வார்டு செயலாளர் சரவணன், மற்றும் தமிழழகன், திருக்குமரன் மற்றும் பல தி.மு.க பிரமுகர்கள் பங்கேற்றனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

