தமிழ்நாட்டில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று முன்றாம் அலைபரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்களின் நலன் கருதி பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைதோறும் நடைபெற்று வந்த மனுநீதிநாள் முகாம்கள் மற்றும் விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் உள்ளிட்டநிகழ்வுகள் 10.01.2022 முதல் அரசின் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ‘காணொளி குறை தீர் கூட்டம்’ கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் முதலில் தங்களது செல்போனில் BharatVC என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். https://bharatvc.nic.in/viewer/7274914749 என்ற லிங்கை கொடுத்து அதில் password என்ற இடத்தில் 96557 என்று கொடுத்தால் தாங்கள் காணொளி வாயிலாக குறைதீர்க் கூட்டத்தில் இணைக்கப் படுவீர்கள்.
இது தொடர்பான மேலும் விபரங்களை என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும். கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் நபர்கள் காலை 10.30 மணிமுதல் காணொளிக் கூட்டத்தில் இணையலாம்.
அதிக எண்ணிக்கையிலான மக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பளிக்கும் வகையில், கோரிக்கைகளை தெரிவிப்பவர்கள் சுருக்கமாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றது.
மேலும் பொதுமக்களின் மனுக்கள் நேரடியாக பெறப்படாது என்பதால் தங்களது எழுத்து வடிவிலான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் முகக்கவசம் அனிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி மனுக்கள் பெட்டியில் செலுத்திடவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

