கன்னியாகுமரி மாவட்டம், கடந்த 2020-ம் வருடம் களியக்காவிளை மார்க்கெட் ரோடு சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் .வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது 2-வது நினைவு தினமான நேற்று அவர் கடைசியாக பணிபுரிந்த களியக்காவிளை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . பத்ரி நாராயணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் . கணேசன் மற்றும் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

