கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
வேதாரண்யம் ஜன 6
நாகப்பட்டினம்; நகராட்சிக்குட்பட்ட வடக்கு பால்பண்ணைச்சேரி தியாகராஜர் நகர்pலும், நாகூர் பாத்திமா பள்ளி வளாக பகுதியிலும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவினையும் மற்றும் கொரேனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவினையும் ஆய்வு செய்து அங்குள்ள கழிவறைகளை தூய்மையாக பராமரிக்குமாறும், அங்குள்ள மருத்துவ பொருட்கள் வைப்பறையில் முகக் கவசம், மற்றும் இதர மருத்துவ பொருட்கள் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

இதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் நகராட்சி காடம்பாடி பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக் கடையிலும், தெற்குபால்பண்ணைச்சேரி பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடையிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தி சேகரிப்பாளர்,
வேதாரண்யம்

