வேதாரண்யம் ஜன06
கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பி. சுப்பிரமணியன் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்ற மூன்றாம் ஆண்டு தொடக்க விழா.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 6 .1 .2020 ஆம் ஆண்டு எஸ்.பி .சுப்பிரமணியன் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். இன்று மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவாக கோடியக்கரை கிழக்குத் தெரு, மருத்துவமனை சாலை, தெற்கு தெரு சந்திப்பில் ஆறு கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டது. மேலும் கோடிக்கரை மீன்துறை அலுவலகம் எதிரே சமுதாய கழிவறை வளாகம் ஐந்து லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
கோடிக்கரை திமுக கிளை கழக செயலாளர் M.அஞ்சப் பிள்ளை முன்னிலை வகிக்க தி.மு.க வேதாரணியம் ஒன்றிய கழக செயலாளர் .என். சதாசிவம் இரண்டு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் கோடிக்கரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பி. சுப்ரமணியன் துணைத் தலைவர் து. குமார் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் சி.ஜெயராஜ், கே.பி.ராமன், ரஞ்சிதம் , ராஜேஸ்வரி மற்றும்,ஊராட்சி செயலாளர் அறிவானந்தம் மற்றும் திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட. செய்தியாளர்.

