தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவசபயிற்சிவகுப்பு
வேதாரண்யம் டிச 5
நாகப்பட்டினம் மாவட்டவேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.ஸி தேர்வுகளுக்கு பிற்பகல் 3 மணிமுதல் 6 மணிவரை இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் போட்டித்தேர்வுகளுக்கு நேரடி பயிற்சி வகுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் ஊக்க உரை வழங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம் மூலம் அலுவலகவேலைநாட்களில் 3 மணிமுதல் 6 மணிவரை இலவச பயிற்சி வகுப்பில் மாணவர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறும், மேலும், போட்டித்தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் எனவும், பழைய தேர்வு வினாத்தாள், பள்ளி பாடபுத்தகங்கள் போன்றவற்றை இலவச பயிற்சி வகுப்பில் ஏழை எளிய மாணவ மாணவிகள் அனைவரும் கலந்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதில் 152 மாணவ மாணவிகள் கலந்துகொண்டுபயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணைஆட்சியர் (பயிற்சி) சௌமியா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா, முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பிரகாசம், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிவகுமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்,
வேதாரண்யம்.

