புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது – 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
♻️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் தலைமையில் விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மகேந்திரன், சங்கரலிங்கபுரம் காவல் நிலையம் முதல் நிலை காவலர் பால்ராஜ், காடல்குடி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் முத்துகாமாட்சி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (03.01.2022) புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லமூப்பன் மடம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த TN 69 AV 3207 என்ற எண் கொண்ட ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் நாகராஜ் (44), த/பெ. காளிமுத்து, தேவர் தெரு, நாகலாபுரம் மற்றும் முருகன் (34), த/பெ. வேல், தேவர் தெரு, நாகலாபுரம் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக அதிக அளவிலான மது பாட்டில்களை ஆட்டோவில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
உடனடியாக மேற்படி போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 410 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத விற்பனைக்காக மது பாட்டில்களை கடத்திச் சென்ற 2 எதிரிகளை கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

