இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்
வேதாரண்யம் ஜன 3
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து இன்று பள்ளிக் குழந்தைகளுக்கு 15 வயது முதல் 18 வயதிற்கான இளம் சிறார்களுக்கான கோவக்சீன் தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் சென்னை சைதாபேட்டையில் உள்ள அரசு பள்ளியில் இன்று துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட நடராஜன் தமயந்தி உயர்நிலைப் பள்ளியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் 15 வயது முதல் 18 வயதிற்கான பிறந்த வருடம் 2004 முதல் 2007 வரை உள்ள இளம் சிறார்களுக்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் இருந்தனர்.

மாவட்டத்தில் 144 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 25089 இளம் சிறார்கள் பயில்கின்றனர். அவர்களுக்கான கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக சுமார் 50 பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் விஜயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் நடராஜன் தமயந்தி தலைமையாசிரியர் ஷீலாகிரேஸ், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

