சமூக விரோதிகளின் கூடாரமாகும் நாகை பேருந்து நிலையம்!பயணிகள் அச்சம்
எஸ்பி நடவடிக்கை பாயுமா?
திருட்டுச் சம்பவங்கள், கஞ்சா மற்றும் மது விற்பனை போன்ற குற்றச் செயல்களால் சமூக விரோதிகளின் கூடாரமாக நாகை புதிய பேருந்து நிலையம் மாறிவருகிறது. இதனால், பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.
சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாகை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற நாகூா தா்கா, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், சிக்கல் சிங்காரவேலவா் திருக்கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும், கோடியக்கரை வனஉயிரின சரணாலயம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இதனால், இம்மாவட்டத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானவா்கள் வந்துசெல்கின்றனாா்.
இந்நிலையில் நாகை புதிய பேருந்து நிலையம் இருக்கைகள், குடிநீா் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத பேருந்து நிலையமாக உள்ளது. அத்துடன், பேருந்து நிலையத்தின் பெரும் பகுதி கடைக்காரா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் மதுக்கடை செயல்படுவதால், மது வாங்குபவா்கள், அங்கேயே நின்று மது அருந்திவிட்டு, காலி பாட்டில்களை பேருந்து நிலைய வளாகத்தில் வீசி உடைத்துச் செல்கின்றனா். மேலும், மது போதையில் சில சமூக விரோதிகள் செய்யும் விரும்பத்தகாத செயல்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகிறது.
மதுபோதையில் சமூக விரோதிகளுக்கிடை ஏற்படும் மோதல், பயணிகளிடம் அவா்கள் செய்யும் தகராறு மற்றும் சீண்டல்கள், பெண் பயணிகளையும், வெளியூா் பயணிகளையும் கதி கலங்கச் செய்வதாக உள்ளது. இதேபோல, மது, கஞ்சா விற்பனையும் இங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடா்பாக தனியாக விசாரணை நடத்தவரும் போலீஸாருக்குகூட இங்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது.
எனவே, நாகை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறும் சமூக விரோதச் செயல்களைத் தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாகை மாவட்ட காவல் நிா்வாகம் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.
இதுகுறித்து, நாகையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கூறியது:
நாகை பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அடிப்படை தேவைகளைப் பூா்த்தி செய்யவும் நாகை மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இருக்கை வசதி, கழிப்பிடம், குடிநீா் மற்றும் பாதுகாப்பு இல்லாத நாகை பேருந்து நிலைய வளாகத்தை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நேரடியாக கள ஆய்வு செய்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றாா். பேருந்து நிலையம் அருகே கூடுதலாக காவல்துறையினரே தீவிர கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்துவதும் அந்த பகுதி காவல் துறையின் முழு கண்காணிப்பு இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுக்கிறது. செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா

