நாகை இ.ஜி.எஸ். கல்லூரி சார்பில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கம்
வேதாரண்யம் டிச 31
நாகப்பட்டினம் இ.ஜி.எஸ் கல்லூரி சார்பில் தமிழக அரசின் மீண்டும் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டா் அருண்தம்புராஜ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் துவக்கி வைத்து கலந்து கொண்டனர்.
இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் இல்லா நாகை, மஞ்சள் பை பயன்படுத்துவோம் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

