சுனாமி 17வது நினைவு தினம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் மலர்வளையம் வைத்து அஞ்சலி
வேதாரண்யம் டிச 26
நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள
சுனாமி நினைவுப் பூங்காவில் 17-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலிசெலுத்தினர்.

ஆழிப் பேரலையில் உயிரிழந்தவர்களுக்கும், சுனாமியால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்கி பயிலும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் இராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ரமாதேவி, நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தோட்டகலை உதவி இயக்குநர் திவ்யா உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

