திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில், கடந்த மாதம் திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்டு இறந்தவரின் குடும்பத்திற்கு Tamil Nadu IPS Officers Association சார்பாக ADGP Operation Dr. அமல்ராஜ், IPS., ரூபாய் 4,98,480/- க்கான காசோலை வழங்கினார். அவர்களுடன் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் IPS., திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் IPS மற்றும் திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் IPS., ஆகியோர் உடன் இருந்தனர்.

