களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: புதுக்கோட்டை இருதய ஆண்டவர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!
—————————
புதுக்கோட்டை,
டிச,25
ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகள் மிக எளிமையாக கொண்டாடப்பட்டன. இந்த வருடம் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் வழிபாடு நடத்துவதற்கு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதாலும் விமரிசையாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே வீடுகளில் நட்சத்திரங்களை தொங்கவிட்டும், குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்தும் பண்டிகை கொண்டாட ஆயத்தமானார்கள்.
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. அனைத்து ஆலயங்களும் அலங்கார மின் விளக்குகளால் நேற்று இரவு முதலே அலங்கரிக்கப்பட்டன. நேற்று
இரவு 11.30 மணி முதல் அதிகாலை வரை கிறிஸ்துமஸ் வழிபாடுகள் ஆலயங்களில் நடந்தன.
புதுக்கோட்டை மாவட்டம் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பேரருட்திரு U. சவரிமுத்து உதவி பங்குதந்தை T. கஸ்மீர் ராஜ் மற்றும் அருட்தந்தையர்களால் சிறப்பாக வழிபாடு நடைபெற்றது.

திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா அவர்கள் கலந்து கொண்டார் மதம் அனைவருக்கும் சமம் என்ற குறிக்கோளுடன் கிறிஸ்மஸ் வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்று கிறிஸ்தவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
செய்தி தொகுப்பு
புதுக்கோட்டை அமல்ராஜ்
புகைப்படம் லக்ஷ்மி

