கோடியக்கரை மாரியம்மன் கோயிலில் புதிய அம்மன் சிலை வைக்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
வேதாரணியம் டிச 24
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை அருள்மிகு கோடி முத்து மாரியம்மன் ஆலயம் மிக பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவு கோயிலில் இருந்த வெண்கல சிலைகள் திருடு போனது. அப்போது மூல விக்கிரகம் மாரியம்மனை திருடர்கள் ஐம்பொன் சிலை என நினைத்து அதை எடுக்க முயற்சித்தபோது அம்மன் சிலையின் கைப்பகுதி உடைந்தது .

ஒரு மாதத்தில் வெண்கல சிலைகளை காவல்துறையினர் மீட்டனர். மாரியம்மன் கோவிலுக்கு தற்போது கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்துவரும் வேளையில் பழுதான அம்மன் கல் சிலையை மாற்ற வேண்டும் என ஊர் மக்கள் முடிவெடுத்து மகாபலிபுரம் அருகே உள்ள காரணையிலிருந்து இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அம்மன் மற்றும் துவாரபாலகர் சிலைகள் இன்று எடுத்து வரப்பட்டது.

கோடியக்காடு குழகர் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க தெரு வீதிகளில் ஊர்வலமாக கோடியக்கரை மாரியம்மன் கோயிலுக்குஎடுத்து வரப்பட்டது. புதிதாக வந்த அம்மன் சிலையை பொதுமக்கள் தரிசித்தனர் .இதில் ஆலய நிர்வாகி பாலசுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் எஸ். பி. சுப்பிரமணியன் , லயன் டாக்டர் ஏ.வி.எஸ். அனந்தராமன் , மணிகண்ட சிவாச்சாரியர் மற்றும் திருப்பணி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

