கோவை டிஐஜி அலுவலகப் பணியாளர்களுக்கென தனி நூலகத்தை கோவை சரக டிஐஜி முத்துசாமி திறந்துவைத்தார்
அகில உலக அரிமா சங்கம், கோவை கே.ஆர்.புரம் கிளையின் ஏற்பாட்டில், கோயம்புத்தூர் சரக காவல் அலுவலகப் பணியாளர்களுக்கென, அலுவலக வளாகத்தில் தனி நூலகம் 23.12.2021 திறக்கப்பட்டது. இதனை கோவை சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப மற்றும் முன்னாள் அரிமா கவர்னர் மோகன்லால் கட்டாரியா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் லயன் N.சுப்ரமணியம் செய்தார். சரக காவல் அலுவலகப் பணியாளர்கள் சார்பாக கண்காணிப்பாளர் சுந்தர்சிங் நன்றி கூறினார்.

