பழங்குடியினர் நல மாணவர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2021-2022–ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப் படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் (10-ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் ப்ரிமெட்ரிக் (ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள்) ஆகிய திட்டங்களுக்குரிய இணையதளம் 13.12.2021 அன்றுதிறக்கப்பட்டுள்ளது என்றும், மேற்கண்டதிட்டங்களின் கீழ் பயன்பெற தகுதிவாய்ந்த பழங்குடியினர் நலமாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் பெற்று மாணாக்கர்களுடைய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரியமுறையில் பூர்த்திசெய்து, கல்வி உதவித்தொகை விண்ணப்பத்துடன் சாதிச்சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் 13.01.2022-க்குள் கல்வி இணையதள வழியில் விண்ணப்பித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக்கொள்கிறார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்.

