• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் ராஜாவின்கோவில் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை

policeseithitv by policeseithitv
December 21, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் ராஜாவின்கோவில் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி ராஜாவின்கோவில் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை நிறுவப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ராஜவின்கோவில் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை நிறுவப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து துணை தலைவர் பிரபா ஹெப்சி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஸ்மார்ட் வகுப்பறை தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்கள், வரைபடங்கள், வீடியோக்கள் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். இது மாணவர்களுக்கு சுலபமாகவும், சுவாரஸ்யமாகவும், புரிந்துகொள்ள வழி வகுக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். மேலும், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் முக்கிய முன்னெடுப்பான முத்துச்சரத்தின் கீழ், தாமிர வித்யாலயம் இளைஞர்களின் கனவுகளை, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்மபடுத்த தரமான கல்வியையும், கல்வி ஊக்கத் தொகைகையும் வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதன் மூலம் சுமார் 20ஆயிரம் குடும்பங்கள் பயனடைகின்றன.
இந்த நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் காப்பர் சிஓஓ சுமதி கூறுகையில், “திருப்பி அளிப்பது என்பது ஸ்டெர்லைட் காப்பர் டி.என்.ஏ.வில் உள்ளது. ஸ்டெர்லைட், தூத்துக்குடி சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் 10,776 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினோம். வரும் ஆண்டுகளில் மாணவர்களுக்கான ஸ்டெர்லைட் கல்வித் திட்டம் 20, 000 மாணவர்களை சென்றடைவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
உலகின் சிறந்த தொழில்நுட்பங்களை தூத்துக்குடி மாணவர்களுக்கு கிடைக்க செய்து பிரகாசமான எதிர்காலத்தையும், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படவும் செயலாற்றி வருகிறோம். தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலை உயர கல்வி, சுகாதாரம், சுத்தமான குடிநீர், மரம் வளர்ப்பு, இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
வேதாந்தாவின் சமூக நலத் திட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நந்த்கர் அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பது, கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களுக்கு திறன்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனில் அகர்வால் அறக்கட்டளையின் கீழ், வேதாந்தா குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊட்டச்சத்து, பெண்கள்- குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம், மற்றும் விலங்குகள் நலன் ஆகிய திட்டங்களின் மேம்பாட்டிற்காக 5000 கோடி ரூபாய் வழங்க உறுதியளித்துள்ளது.
வேதாந்தா நிறுவனமானது வேதாந்தா ரிசோர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். எண்ணெய், எரிவாயு மற்றும் உலோக உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் வேதாந்தா, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. வேதாந்தா நிறுவனம், இயற்கை வளத்துறையில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிர்வாகத்திற்கான (ESG) கட்டமைப்புகளை ஏற்படுத்த விரிவான செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2050க்குள்ளோ அதற்கு முன்னதாகவோ கார்பன் உமிழ்வை குறைத்து பூஜ்ஜியமாக மாற்ற உறுதி பூண்டுள்ளது.
வேதாந்தாவின் சமூக நலத் திட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நந்த்கர்கள் அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகளின் ஊட்டச் சத்து குறைபாட்டை ஒழிப்பது, கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களுக்கு திறன்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனில் அகர்வால் அறக்கட்டளையின் கீழ், வேதாந்தா குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊட்டச்சத்து, பெண்கள்- குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம், மற்றும் விலங்குகள் நலன் ஆகியவற்றில் சமூக தாக்கத் திட்டங்களுக்காக ரூ.5000 கோடி வழங்க உறுதியளித்துள்ளது என்று தெரிவித்தார்.
Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5-வது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி சிறப்பு சித்த மருத்துவ முகாம்

Next Post
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5-வது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி சிறப்பு சித்த மருத்துவ முகாம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5-வது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி சிறப்பு சித்த மருத்துவ முகாம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In