நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் ’15-ஆவது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
வேதாரண்யம் டிச 16
தமிழ்நாடு முழுவதும் கோவிட் – 19 கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணையின்படி ‘மெகா தடுப்பூசி முகாம்’ நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், மேலும் தற்போது ஒமைக்ரான் என்கிற உருமாறிய தொற்று பரவலாக வெளிமாநிலங்களில் பரவ துவங்கியுள்ள நிலையில் தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் அவசியம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என்பதற்காக வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் மற்றும் 350 சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், மேலும் பொதுமக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்லும் போது தவறாது அவசியம் முகக்கவசம் அணிந்து செல்லுமாறும், சமூக இடைவெளியினை பின்பற்றிட வேண்டுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

