மாபெரும் தனியார் துறைவேலைவாய்ப்புமுகாம்
வேதாரண்யம் டிச 16
நாகப்பட்டினம் மாவட்டநிர்வாகம் மற்றும் மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் முன்னணி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடக்கவுள்ளது.
இம்முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரையுள்ள இளைஞர்கள் (ஆண் பெண் இருபாலர்கள்) கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைந்திட கேட்டுக்கொள்ளப் படுகிறது. வேலைவாய்ப்பு முகாமிற்கு வருகை தரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். அத்துடன் சுய விவரக்குறிப்பு, ஆதார் அட்டைநகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

