மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் (ம) நலத்திட்ட உதவிகள் வழங்கல்
வேதாரண்யம் டிச 14
நாகப்பட்டினம் மாவட்டம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத் திட்டஉதவிகள் வழங்கும் விழாவில் 21.85 கோடிரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் வழங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகதலைவர் கௌதமன் முன்னிலை வகித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் நடைபெற்ற விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 58,463 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கி சிறப்பித்தார்கள்.
அதனைத் தொடர்ந்துநாகப்பட்டினம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் முன்னிலை வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 656 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 9469 உறுப்பினர்களுக்கு 21.85 கோடிரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக்குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் பாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்,மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

