இந்திய கம்யூ கட்சி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம்
வேதாரண்யம் டிச 14
வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம், வேலைவாய்ப்பு இழந்த விவசாய தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் வழங்க கோரியும், மழை நீர் வடியாமல் தடுக்கும் வெங்காய தாமரை செடிகளை அகற்றக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் செங்குட்டுவன், ஒன்றியத் தலைவர் அருள்ஒளி, விதொச ஒன்றிய செயலாளர் மாரியப்பன், ஒன்றியத் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையில் நடந்தது.
கோரிக்கைகள் குறித்து மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், விதொச மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூ. கட்சி வேதை ஒன்றியச் செயலாளர் சிவகுருபாண்டியன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
இதில் ஒன்றியம் முழுவதிலிருந்தும் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

