அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
அரியலூர் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருந்தி வாழ்வதற்காக மன மற்றும் மருத்துவ ரீதியான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில், அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி முன்னிலையில் 12.12.2021 அன்று
St.மேரிஸ் திருமண மஹாலில் நடைபெற்றது.
இதில் சிறப்புரை ஆற்றிய காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது:
- போதை பழக்கத்தினால் மனிதர்கள் தனது பகுத்தறிவை இழக்கின்றனர்.
- போதைப் பழக்கத்தால் தவறான வழியிலும், குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
- போதைப்பழக்கம் அடிமையாவதால் குடும்பத்தை இழக்க நேரிடுகிறது.
- போதைப் பழக்கத்திற்கு உடந்தையாக இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்.
- போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் போதைப் பழக்கத்தை விட்டு மீள வேண்டும் என்றும் அதற்கு அரியலூர் மாவட்ட காவல்துறை உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி போதை மறுவாழ்வு மையம் (NGO), மகளிர் மன்ற தொண்டு நிறுவன திட்ட இயக்குநர் திரு. காஜாமலை அவர்கள் கலந்துகொண்டு போதை பொருட்களை பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும், அந்த பழக்கத்தில் இருந்து திருந்தி வாழ்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் போதை பழக்கத்தில் இருந்து திருந்தி வாழ நினைப்பவருக்கு அரசு உதவும் சலுகைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இறுதியாக போதைப் பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மதன் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் அரியலூர் காவல் உட்கோட்டத்தில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அடிமையானவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

