பாரதியார் பிறந்த நாள் விழா: தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மலர் தூவி மரியாதை
விடுதலைக்கவி, புரட்சிக்கவி, மகாகவி என்றெல்லாம் போற்றப்படும் பாரதியாரின் 140-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி
தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பிரஸ் கிளப் கெளரவ ஆலோசகர் மூத்த பத்திரிகையாளர் அருண் தலைமையில் மன்ற அலுவலகத்தில் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் இசக்கி ராஜா, செயற்குழு உறுப்பினர் பார்த்திப சங்கர் மற்றும் உறுப்பினர்கள் பிரபாகரன், மாணிக்கம், பாலகுமார், சித்திக், கார்த்திகேயன், மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

