வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு தர்ப்பணம் கொடுத்து பிண்டத்தை கடலில் கரைத்து திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன்
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று ( 04.12.2021 ) வழக்கம்போல் முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓஎஸ் மணியன் அவர்கள் சன்னதி கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து பின்பு பிண்டத்தை கடலில் கரைத்து புனித நீராடினார் பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

உடன் மாவட்ட பொருளாளர் சண்முகராசு ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன் சுப்பையன் நகர செயலாளர் நமச்சிவாயம் நகர துணை செயலாளர் சுரேஷ்பாபு ஒன்றிய குழுத்தலைவர் கமலா அன்பழகன் நாகை நகரச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தங்க. கதிரவன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நடராஜன் ஊராட்சி மன்றத் தலைவர்கள் விஜயா சோமசுந்தரம் ராமையன் அபி.வீரமணி தேவி செந்தில் பானுமதி சுப்பிரமணியன் கவிதா தர்மராஜன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட. செய்தியாளர்.

