குயில் பறவைகளை பிடித்து விற்ற நபர்களை பிடித்து அபராதம் விதித்த கோடிக்கரை வனத்துறையினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நவ 25 தஞ்சாவூர் மண்டல தலைமை வனப்பாதுகாவலர் திரு.சதீஷ் இ.வ.ப
நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா இ.வ. பஆகியோர்களின் உத்தரவின்படி
வேதாரண்யம் வனச்சர அலுவலர் பா .அயூப் கான் தலைமையில் வனகுழுவினர்கள்
செல்வி. நித்திய ஜீவா வனவர், திரு .ராமதாஸ் வனவர், லோகநாதன் சுதாகர் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட குழுவினர்கள் தோப்புத்துறை பகுதியில் பறவைகள் பாதுகாப்பு ரோந்துபணியில் ஈடுபட்டபோது தோப்பு துறை ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கோழி கடை வைத்திருக்கும் ஹாஜி என்ற செய்யது மன்சூர் த/பெ ஜமால் முகம்மது வயது 48 என்பவரும் பாஸ்கர் த/பெ வீரப்பன் சுவ24 அய்யனார் கோவில்தெரு விழுந்தா மாவடியை சேர்ந்தவர் 18 குயில்பறவைகளை விழுந்தா மாவடி வனத்துறை சவுக்கு தோட்டங்களிருந்து பிடித்து வந்து மேற்படி நபருக்க்கு ஜோடி 200 ரூபாயிக்கு விற்பனை செய்யும்போது இரு நபர்களையும் பிடித்து 1972இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கைது செய்து வழக்கு பதிவு செய்து வனஉயிரினக் காப்பாளர் நாகப்பட்டினம் அவர்களின் ஆணையின்படி நபர் ஒன்றுக்கு௹ 50000 (ஐம்பது ஆயிரம் வீதம்) இரண்டு நபருக்கும் 100000/=(ஒரு லட்சம் ரூபாய்) அபராதம் வனச்சரக அலுவலர் அயூப் கான் அவர்களால் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற குற்றச்செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம் என்று வனச்சரக அலுவலர்
பா.அயூப்கான் வேதாரண்யம் தெரிவித்துகொண்டார்.
செய்தி தொகுப்பு
DR.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

