11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
தாப்பாத்தி அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த முருகைய்யா மகன் சுஜீவன் (எ) சந்தோஷ் (22) என்பவர் நேற்று (23.11.2021) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக கடத்தி சென்றபோது கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. இளவரசன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரி சுஜீவன் (எ) சந்தோசை கைது செய்தார்.

