வேதாரண்யம் அருகே உள்ள செட்டிபுலம் ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக செப்பனிட படாமல் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதி ஆகையால் பெற்றோர்கள் சாலையில் நடவு நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செட்டிபுலம் ஊராட்சியில் தென்னம்புலத்திலிருந்து அவரிக்காடு செல்லும் சாலையானது சுமார் 8 கிலோமீட்டர் அந்த சாலை ஆனது சுமார் பதினைந்து வருடங்களாக செப்பனிட படாமல் உள்ளதால் கடந்த தொடர் மழையின் காரணமாக சாலையெங்கும் தண்ணீரில் மூழ்கி உள்ளது பொதுமக்கள் செல்ல முடியாமலும் வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாமல் தற்போது பள்ளி தொடங்கிய நிலையில் மாணவர்கள் சாலையிலுள்ள மழைநீரில் கடந்து செல்வதால் குழந்தைகள் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கவலையில் உள்ளனர்.

அதனால் இன்று பள்ளி செல்லும் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் உள்ள மழைநீரில் நடவு நட்டு தங்களின் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த பகுதியில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் இல்லையென்றால் சாலை மறியலில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

