நாகை நவ 18 கோயம்புத்தூரில் நடைபெற இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு- மாநில தலைவர் ராஜேந்திரன் அறிவிப்பு.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில அவசர பொதுக்குழு கூட்டம் வரும் 20-ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் நடைபெறுவதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசால் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட விடுக்கப்பட்டு இருப்பதன் காரணமாக பேரிடர் பணியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ளாத நிலை உள்ளதால் மாநில பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்க மாநில தலைவர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
மேலும் , போலியாக சிலர் கிராம நிர்வாக அலுவலர் சங்க பொறுப்பாளர்கள் என தங்களை காட்டிக் கொண்டு பேட்டி அளிப்பதாகவும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வறிப் பின் போது மாவட்ட தலைவர் சோ.ரெங்கநாதன், அமைப்பு செயலாளர் கு.பாலகுமார் வட்டச் செயலாளர் வீ.மகேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் எம். கோபாலகிருஷ்ணன் ஆர்.உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

