குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம் ஊராட்சிகுட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது*
தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின் பெயரில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட ஆயி குப்பம் ஊராட்சிப் பகுதிகளில் குள்ளஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது
முகாமை ஆயிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் N. பாலகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார் இதில் பொது மக்களுக்கு நோய் கண்டறிதல் பரிசோதனை மற்றும் மழை காலங்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது
முகாமில் ஊழியர்கள் திருச்சபை நிர்வாக குழு பாஸ்டர் கனகராஜ் ஊராட்சி செயலர் சேகர் தன்னார்வலர் விஜயகாந்த் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்

