நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் பாதிப்புகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்கள் இன்று மதியம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்ததால் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் செல்ல வழியில்லாமல் தண்ணீர் தேங்கியதால் வயல்களில் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கருங்கண்ணி மற்றும் அருந்தவம்புலம் ஆகிய பகுதிகளில் மழையில் சேதமடைந்த பயிர்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது முதலமைச்சரிடம் வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் பலரும் நிலைமை குறித்து எடுத்துக் கூறினார்கள்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார். முதல்வரின் ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு,மெய்யநாதன், பெரியகருப்பன், பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் வேளாண்மை துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட. செய்தியாளர்.

